பேரலையின் பெயர் ஜெயகாந்தன்

ஜெயகாந்தனின் நினைவஞ்சலி குறித்த இரண்டு மணிநேர காணொளி ஒன்று காணக் கிடைத்தது. நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் கூறியதாக சொன்ன பதில்களை அக்காணொலியில் இருந்து இங்கே எழுத்தாக்கம் செய்திருக்கிறேன். 

(தம்பி Google Voice... அந்தப்பக்கம் ஓரமா போ...)


நிருபர் : " உங்களுக்கு நிலையான கருத்தே இருக்கமுடியாது என்பது என் கருத்து. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? "

ஜேகே : " எனைப் பற்றிய உங்களின் இந்த கருத்துக் கூட நிலையாக இருக்காது என்பது என் கருத்து "

( அதுதான் ஜெயகாந்தன் )


நிருபர் : " உங்களுக்கு ஞானபீட விருது  கிடைச்சிருக்கு. இதப்பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க ? "

ஜே.கே : " நான் சின்னப்பையனா இருக்குறப்போ, எங்க வீட்டுக்கு எங்க மாமா வந்திருந்தாரு...வந்தவர் புதுசா சட்டை ஒன்னு வாங்கி வந்திருந்தாரு. அந்த சட்டையை எங்ககிட்ட காட்டி, 'யாருக்கு வேணும் ?'-னு கேட்டார். எங்க வீட்டுல ஏற்கனவே அப்ப குழந்தைங்க ஜாஸ்தி.

எல்லோரும்... எனக்கு...எனக்குன்னு கை தூக்குனாங்க. நான் மட்டும் கை தூக்கல. 'நீ ஏன் கை தூக்கல ?'-ன்னு எங்க மாமா கேட்டாரு. 'தூக்குனா மட்டும் எனக்கு கிடைக்கவா போகுது ? யாருக்கோ கிடைக்கப்போற சட்டைக்கு நான் ஏன் கை தூக்கணும் ?'-ன்னு கேட்டேன்.

'இந்த சட்டை உனக்குத்தான்டா'-ன்னு சொல்லி எங்க மாமா என்ட்ட குடுத்துட்டாரு. ஒருவேளை இந்த ஞானபீட விருதும், நான் கை தூக்காததால எனக்கு கிடைச்ச விருதா இருக்கோமோ-ன்னு நெனைக்கிறேன் "

( இது ஜெயகாந்தன் நினைவஞ்சலியில் , ஜெயகாந்தனைப் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டது. )


நிருபர் : " தமிழர்கள் எதை நினைத்து பெருமை கொள்ளலாம் ? "

ஜே.கே : " தமிழன் உண்மையில் மகத்தானவன். இன்று வரை கம்பனைப் போல் ஒரு படைப்பாளி தோன்றவில்லை. தமிழன் எல்லாவற்றிலும் மூத்தவன். பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து கப்பல் ஓட்டியவன் அவன் தான். விவேகானந்தர் போன்றதோர் துறவியை அமெரிக்காவிற்கு அனுப்பியவன் அவன் தான்.  மதுரைக்கு வந்த பாரிஸ்டர் காந்தியை
தன் கோட்டு சூட்டு எல்லாவற்றையும் கழற்றி போட்டுவிட்டு அரைநிர்வாண பக்கிரியாய் மாற்றியது நம் தமிழகம் தான் "


( எழுத்தாளர் ஜெயகாந்தன் அலை. சிந்தனையாளர் ஜெயகாந்தன் பேரலை‌.
எழுத்துக்கு கூட அணையிடலாம். சிந்தனைக்கு ? )

------------------------------------------------------------
ஆதலால் தாங்கள் கூற வருவது :


Comments

Popular posts from this blog

புறநானூறு - 194

கம்பராமாயணம் - 02

உயிரெழுத்தும் ஓரெழுத்தும்