Quora பதில்கள்

வணக்கம் வந்தனம்.

Quora-வில் படித்ததை இங்கே நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.

அறிவிப்பு : அடைப்புக்குள் (Brackets) இருப்பவைகளை அசரீரியின் குரல் எனக் கருதிக் கொள்ளவும் ( அசரீரி - ஒரு உடலற்ற உயிர், அரூபி )


சில உளவியல் உண்மைகள் உங்களுக்காக :
  • நீங்கள் அதிகமாக மதிக்கும் ஒரு நபர் தான் உங்களுக்கு அதிகபட்ச துன்பத்தையும் தருகிறார்.
  • இரண்டில் ஒன்று உங்களை மாற்றும். 
              1. வாழ்க்கையில் போதுமான அளவு கல்வி (இயற்கை, மனிதர்கள், சக உயிர்கள் என அனைத்திடம் இருந்தும்)
              2. போதுமான அளவு கஷ்டங்கள்.

  • சிலசமயம், இதழ்களை விட கண்கள் அதிகமாய் பேசும் .

  • யார் உங்களை பாதாளத்திற்கு இழுக்க முயல்கிறார்களோ, அவர்கள் ஏற்கனவே பாதாளத்தில் தான் இருக்கிறார்கள். ( வீணாய் அவர்களை எதுவும் செய்ய வேண்டாம். அவர்களே அவர்களை பார்த்துக் கொள்வார்கள். )
  • உங்கள் உணர்வுகள்(feelings) ஆழம் ஆக ஆக, அதை வெளிப்படுத்துவதும் மிக மிகக் கடினம்.
( ஆழ்கடலுக்குள்ள போக போக காது ஜிவ்வினு அடச்சுகுதாம். )
  • உணவற்ற வயிறும், உறக்கமற்ற மூளையுமே கோபத்தை உண்டாக்கும் ஆகப்பெரிய இரு காரணிகள். 
( சோறா ? சண்டையா ? --> சோறு. )
  • தூக்கம் ஒருவரின் படைப்புத் திறனையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது.
  • பகல் நேர குட்டித் தூக்கங்கள் ஞாபகசக்தியை அதிகரிப்பதோடு இதய பிரச்சினை வருவதற்கான வாய்ப்பையும் அறவே குறைத்துவிடுகிறது.
  • ஒருவர், தாம் உணரும் வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாமல் தவித்து நிற்கும் நொடியில் உடைந்து அழுதுவிடுகிறார்.
  • பாடுதல் பாடகர்களுக்குள் நேர்மறையான உளவியல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பாடுதல் எண்டோர்பின்களை (Endorphins) சுரக்க வைத்து உங்களுக்குள் நல்லதொரு சந்தோச உணர்வைத் தருகிறது.  
( THUG LIFE ~ Sing it ~ ட்ட்...டாரே...ராரே...ரா )

  • ஒருவர் உங்களிடம் பொய் கூறுகிறார் என்றால் அவர் உங்களிடம் நேர்மையாக இருப்பதற்கு அவசியமில்லை என்று நினைக்கிறார்(Maybe).
( Maybe - அவனுக்கு என்ன பிரச்சனையோ ? , தீங்கு ஏற்படுத்தாத பொய்கள் தப்பில்லை ~ அப்பறம் வாழ்க்கை சலிச்சிராது ? )
  • இருக்கும் இடத்தோடு சுயத்தையும் மறந்து ஒருவர் எண்ணங்களில் தத்தளித்துக்கொண்டு இருந்தால், ஆழ்மன ரீதியாக 85 சதவீதம் அவர் சந்தோசமாக இல்லை என்று பொருள்
( கவலைகளுக்கு புத்தரை அணுகவும். வரம்பு மீறிய கவலைகளுக்கு மனநல மருத்துவரை அணுகவும். எதுவும் தவறில்லை.)

  • இப்போது உங்களின் வயது 16 என்றால், உங்களை திருமணம் செய்யும் பெண்ணை நீங்கள் சந்தித்திருப்பதற்கு 84 சதவீதம் வாய்ப்புண்டு.
( எங்கோ படித்தது: யோவ் நீ இந்தியாவுக்கு வாய்யா. அது பொய்-ன்னு நான் நிறுபிச்சு காட்டுறேன் )

  • அடுத்தவரை பின்தொடராதே. நீ நீயாக இரு. 
( சரியாக உழை. வித்தியாசமாக சிந்தி. போதும். நல்ல மணம் போதா மலருக்கு ? வண்டுகளை ஈர்க்க. நற்குணங்கள் போதா ? மனிதர்களை ஈர்க்க. )

  • ஒரு பெண் ( முக்கியமா காதலி, மனைவி - "Dangerous Fellows" ) உங்களிடம் கேட்டால், முடிந்தவரை உண்மையே பேசவும். கேள்விக்கான உண்மையான பதிலும் அவளுக்கு தெரிந்திருக்க அதிக வாய்ப்புண்டு‌.
  • புதிய மனிதருள் உங்களைப் பற்றிய பாதிப்பை நீங்கள் ஏற்படுத்த, காலம் உங்களுக்கு கொடுக்கும் அதிகபட்ச அவகாசம் 7 நொடிகள்.
  • நீங்கள் புதிதாய் ஒரு மனிதரை சந்திக்கீறார்கள் என்றால், உங்களைப் பற்றி நல்லதொரு அபிப்பிரயாத்தை (impression) ஏற்படுத்த காலம் வழங்கும் அவகாசம் ஏழு நொடிகள்‌.
  • மனிதமனம் ஒருவர் மீது ஒருமுறை மட்டுமே முழுமையான நம்பிக்கையை வைக்கும். ஒரு முறை உடைந்தால், அதை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது ( Kintsugi - மட்பாண்டத்துக்கு பண்றத மனிதமனத்திற்கும் பண்ணவோம் )

{ கவனத்திற்கு: Kintsugi/கின்ட்சூகி - உடைந்த மண்பாண்டங்களை தங்கத்தை பிசினோட சேர்த்து ஒட்ட வைக்கும் ஜப்பானிய கலை }

  • தன்மீது கவனம் செலுத்தும் ஆண்களால் பெண்கள் அதிகமாக ஈர்க்கப்படுகிறார்கள். ஞாபகப்படுத்துவதற்கு வேலையின்றி அப்பெண்ணைச் சார்ந்த அனைத்தையும் ஞாபகம் வைத்துக்கொள்ளும் ஆண், அப்பெண்ணை அதிகமாக ஈர்க்கிறான். 
( என்னமோ போடா மாதவா ! )

  • பெண்களை விட ஆண்களுடன் அதிகமாக நட்பு கொள்ளும் பெண்கள் சந்தோசமாகவும் நலமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்கின்றனர். 

( எவன் பாத்த வேலடா இது ?. நாமளும் நம்ம பங்கு-க்கு கொளுத்திப் போடுவோம்‌. ஆமா அது உண்ம தான். )

  • மனிதர்கள் ஒருவரை, அவர் அணியும் காலணியை வைத்து அவர்களைப் பற்றி எடை போடுகின்றனர். நாம் நினைப்பதை விட காலணியின் மதிப்பு அதிகம். ( அபிப்ராய உலகமா இது ? )
-------------------------------------------------------------------------------------------------------------------
தகவல் உதவி : 

https://www.quora.com/What-are-some-psychological-facts-that-people-dont-know-1/answer/Abbas-Arif-1?share=d5ba93bc&srid=oo7q
--------------------------------------------------------------------------------------------------------------------

ஆதலால், தாங்கள் கூற வருவது:






















Comments

Popular posts from this blog

புறநானூறு - 194

கம்பராமாயணம் - 02

உயிரெழுத்தும் ஓரெழுத்தும்