'Sacred games'-ன் தலைப்பிற்கான காரணங்கள் - பகுதி 2
அபாயம் : முன்பே கூறியது போல், Sacred games பார்த்தவர்களும், 'பார்க்க மாட்டேன்'-னு உறுதியா இருப்பவர்கள் மட்டும் படியுங்கள். இனிமே தான் பார்க்க போகிறீர்கள் எனில் இப்பொழுதை படிப்பதை நிறுத்திவிட்டு சென்றுவிடவும். ஏனெனில் கதையின் முக்கியமான முடிச்சுகளை இக்கட்டுரை சொல்லக்கூடும்.
Scared games - ன் முதல் இரண்டு தலைப்புகளுக்கான காரணங்களை படிக்காதவர்கள் கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து அறிந்து கொள்ளவும்.
மூன்றாம் & நான்காம் தலைப்பிற்கான காரணங்கள்... இதோ கீழே...
3. அடாபி வடாபி ( Atapi vatapi ) :
இந்து புராணத்தின் படி, அடாபியும் வடாபியும் சகோதரர்கள். தன் வீட்டிற்கு உணவு உண்ண வருமாறு பயணிகளை அடாபி அன்புடன் அழைப்பான். அவர்களும் சம்மதித்து அவன் வீட்டிற்கு விருந்து உண்ணச் செல்வர். வடாபி ஆடாக உருமாறுவான். பின்பு ஆட்டுக்கறியாக விருந்தில் இடம்பெறுவான். அவர்களும் அதை சந்தோசமாக உண்டுவிட்டு அவனது வீட்டில் இருந்து புறப்படுவர். அடாபி தன் சகோதரரான வடாபியை வெளியே வருமாறு அழைப்பான். வடாபி அப்பயணிகளின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்து மீண்டும் மனிதனாக உருமாறுவான். இப்படி அவர்கள் இருவரும் சேர்ந்து கொன்ற பயணிகள் ஏராளம்.
Sacred games -ல் அந்த episode-லேயே அத்தலைப்பிற்கான காரணம் காய்துண்டாவின் மூன்றாம் தந்தையான குருஜியால் விளக்கப்படுகிறது.
" பயணிகளை கொன்ற பின் அவர்கள் இருவரும் சந்தோசம் கொள்வர். மதங்களுக்கு நடப்பது இதுவே தான். யூதர்கள், ஹிந்து
முஸ்லிம்கள், கிறித்தவர்களென அனைவரும் அடாபி வடாபி-க்கு பலியானவர்கள் தான். "
முஸ்லிம்கள், கிறித்தவர்களென அனைவரும் அடாபி வடாபி-க்கு பலியானவர்கள் தான். "
4. பிரம்மஹத்யா ( Brahmahatya ) :
பிரம்மஹத்யா என்ற சொல்லுக்கு இரு வேறு அர்த்தங்கள் சொல்லப்படுகிறது.
i) இந்து புராணத்தின் படி, பிராமணர்களை கொல்லுதல்.
ii) இந்துத் தத்துவத்தின் படி, அனைத்து மனித உயிர்களுக்குள்ளும் பிரம்மன் உள்ளது. எனவே பிரம்மஹத்யா என்பது மனித உயிர்களை கொல்லுதல் என பொருள்படும்.
i) இந்து புராணத்தின் படி, பிராமணர்களை கொல்லுதல்.
ii) இந்துத் தத்துவத்தின் படி, அனைத்து மனித உயிர்களுக்குள்ளும் பிரம்மன் உள்ளது. எனவே பிரம்மஹத்யா என்பது மனித உயிர்களை கொல்லுதல் என பொருள்படும்.
இந்து புராணத்தின் படி, சொர்க்கத்தின் தலைவன் இந்திரன். விஸ்வரூபன் என்பவர் ஒரு பிராமணர். அவர் நகரர்களுக்கு ஆதரவாக சிறுதெய்வங்களை வேண்டி வேள்வியொன்றை நடத்தினார். இதை அறிந்த இந்திரன் சினமுற்று அப்பிராமணின் மூன்று தலைகளையும் வெட்டிச் சாய்கிறார். அக்கொலையால் உண்டான குற்றவுணர்ச்சி இந்திரனை முற்றிலுமாக நிம்மதியிழக்கச் செய்தது. அக்குற்றவுணர்ச்சியைப் போக்க பல நூறு வருடங்கள் இந்திரன் ஒரு மூடிய மலருக்குள் தவமிருந்தார். அதன்பின்னும் அக்குற்றவுணர்ச்சி நின்றபாடில்லை. தொடர்ந்து இந்திரனின் மனதை உறுத்திக் கொண்டேயிருந்தது. இந்திரன் தன் குற்றவுணர்ச்சியை பூமி, பெண்கள், மரங்கள் என மூன்றிற்கும் சமமாக பங்கிட்டு கொடுத்ததன் மூலம் தன் மனநிம்மதியை மீண்டும் மீட்டெடுத்தார். அக்குற்றவுணர்ச்சியை பெற்றுக் கொண்டதால் அம்மூன்றும் சில இன்னல்களை சந்திக்க நேரிட்டது. பூமி தன் வளத்தை இழந்தது. பெண்கள் மாதவிடாய்க்கு உள்ளாயினர். மரம் பட்டுப்போனது. ( Aahaan ! )
Scared games கதைப்படி, பிரம்மஹத்யா என்பது மனிதர்களை கொல்லுதலாக பொருள் கொள்ளப்படுகிறது. கடவுள் நம்பிக்கையற்ற மும்பை டான் காய்த்துண்டே தன் காதலி குக்கூ-வை சந்தோசத்தில் ஆழத்த ஐம்பது லட்சம் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் ( Rolls Royce ) காரொன்றை வாங்க ஆசைப்படுகிறார். மோர்வாத் கிராமத்தின் தேர்தலில் இந்து கட்சி ஒன்று ஜெயிப்பதற்காக சில முஸ்லிம்களை காய்த்துண்டே கொலை செய்கிறார். அக்கொலைக்காக பெற்ற பணத்தைக் கொண்டு அக்காரை வாங்குகிறார். இங்கு பிரம்மஹத்தயா என்பது மனிதர்களை கொள்ளுதல் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
தலைப்புகள் தொடரும்....
-------------------------------------------------------------
நிழற்பட உதவி 🙏 :
https://pin.it/r6p6ccpuxjlak7
https://pin.it/46nwndjbuae7vi
-------------------------------------------------------------
நிழற்பட உதவி 🙏 :
https://pin.it/r6p6ccpuxjlak7
https://pin.it/46nwndjbuae7vi
Comments
Post a Comment