குறள் - 1081

இன்பத்துப்பால் > தகை அணங்கு உறுத்தல்

குறள் : 1081

பொருள் :

அவளைக் காணும்போது இவனது நெஞ்சுக்குள் குழப்பமாம். என்னவென்று ?
இவள் தெய்வப் பெண்ணா ? சிறந்த மயிலா ? இல்லை கனமான தோடு அணிந்த பெண்ணா ? என்று...

குறள் :

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

சொல் விளக்கம் :

அணங்குகொல் :

அணங்கு - தன் அழகால் வருத்தும் தெய்வப்பெண்.
கொல் - ஐயம்

தன் அழகால் வருத்தும் தெய்வப்பெண்ணோ ?

ஆய்மயில் கொல்லோ :

ஆய்மயில் - ஆய் + மயில்;
ஆய் - ஆராய்ந்து, அழகிய.

இருக்கும் மயில்களில் ஆராய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த மயில். அழகிய மயில்.

சிறந்த மயிலோ ?

கனங்குழை மாதர்கொல் :

கனங்குழை - கனம் + குழை
கனம் - கனமான
குழை - காதணி, தோடு
மாதர் - பெண்
கொல் - ஐயம்

கனமான தோடு அணிந்த பெண்ணோ ?

மாலும் என் நெஞ்சு :

மாலும் - மயங்குதல், குழப்பும்

மயங்குகிறது என் நெஞ்சு.


Comments

Popular posts from this blog

புறநானூறு - 194

கம்பராமாயணம் - 02

உயிரெழுத்தும் ஓரெழுத்தும்