குறள் - 1083

காமத்துப்பால் > தகை அணங்கு உறுத்தல்

குறள் : 1083

பொருள் : 

இதற்கு முன்பு வரை, அவன் எமனை அறிந்ததில்லையாம். இப்போது அறிந்தானாம்.
அது எப்படி இருக்குமாம் ?

பெரிய போர் ஒன்றை நிகழ்த்தும் கண்களை உடைய பெண் போன்று இருக்குமாம்.

குறள் : 

பண்டறியேன் கூற்றுஎன் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

சொல் விளக்கம் : 

👉 பண்டறியேன் கூற்று என்பதனை

பண்டறியேன் - பண்டு + அறியேன்
பண்டு - முன்பு
அறியேன் - அறிந்ததில்லை.

கூற்று - எமன்

எமனை முன்பு அறிந்ததில்லை....

👉 இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு.

இனியறிந்தேன் - இனி + அறிந்தேன்

பெண்டகையால் - பெண் + தகையால்
தகை - ஒப்பு, ஒத்த,

பேரமர் - பெரிய + அமர்
அமர் - போர்

கட்டு - கண்களை உடையது.


.....இப்போது அறிந்தேன். பெரிய போர் ஒன்றை நிகழ்த்தும் கண்களை உடைய பெண் போன்று இருக்கும்.

Comments

Popular posts from this blog

புறநானூறு - 194

கம்பராமாயணம் - 02

உயிரெழுத்தும் ஓரெழுத்தும்