குறள் - 1084

காமத்துப்பால் > தகை அணங்கு உறுத்தல்

குறள் : 1084

பொருள் : 

எவை ஒன்றுக்கொன்று மாறுபட்டு அமைந்திருக்கிறதாம் அப்பெண்ணிடம் ?

பார்ப்பதற்கு, ஒன்றும் அறியாத அப்பாவி போல்  இருக்கிறாளாம். ஆனால் அவளது கண்களோ பார்ப்போரின் உயிரை உண்ணக்கூடியதாம்.
இப்படி அவளது கண்கள், அவளின் குணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு அமைந்திருக்கிறதாம்.

குறள் : 

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

சொல் விளக்கம் : 

👉கண்டார் உயிருண்ணும்

கண்டார் - பார்ப்பவர்

உயிருண்ணும் - உயிர் + உண்ணும்

பார்ப்பவரின் உயிரை உண்ணுமாம்....

👉தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

தோற்றத்தால் - பார்ப்பதற்கு

பெண்தகை - பெண் தன்மையுடன்

பேதை - ஒன்றும் அறியாதவள், அசடு, அப்பாவி

அமர்த்தன - மாறுபடுதல், பொருந்தாத பொருத்தம்.

....அவளது கண்கள். ஆனால் பார்ப்பதற்கு அப்பெண் பேதை போல் இருப்பாளாம். என்ன ஒரு முரண் ? 

Comments

Popular posts from this blog

புறநானூறு - 194

கம்பராமாயணம் - 02

உயிரெழுத்தும் ஓரெழுத்தும்