குறள் - 1084
காமத்துப்பால் > தகை அணங்கு உறுத்தல்
குறள் : 1084
பொருள் :
எவை ஒன்றுக்கொன்று மாறுபட்டு அமைந்திருக்கிறதாம் அப்பெண்ணிடம் ?
பார்ப்பதற்கு, ஒன்றும் அறியாத அப்பாவி போல் இருக்கிறாளாம். ஆனால் அவளது கண்களோ பார்ப்போரின் உயிரை உண்ணக்கூடியதாம்.
இப்படி அவளது கண்கள், அவளின் குணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு அமைந்திருக்கிறதாம்.
குறள் :
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
சொல் விளக்கம் :
👉கண்டார் உயிருண்ணும்
கண்டார் - பார்ப்பவர்
உயிருண்ணும் - உயிர் + உண்ணும்
பார்ப்பவரின் உயிரை உண்ணுமாம்....
👉தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
தோற்றத்தால் - பார்ப்பதற்கு
பெண்தகை - பெண் தன்மையுடன்
பேதை - ஒன்றும் அறியாதவள், அசடு, அப்பாவி
அமர்த்தன - மாறுபடுதல், பொருந்தாத பொருத்தம்.
....அவளது கண்கள். ஆனால் பார்ப்பதற்கு அப்பெண் பேதை போல் இருப்பாளாம். என்ன ஒரு முரண் ?
குறள் : 1084
பொருள் :
எவை ஒன்றுக்கொன்று மாறுபட்டு அமைந்திருக்கிறதாம் அப்பெண்ணிடம் ?
பார்ப்பதற்கு, ஒன்றும் அறியாத அப்பாவி போல் இருக்கிறாளாம். ஆனால் அவளது கண்களோ பார்ப்போரின் உயிரை உண்ணக்கூடியதாம்.
இப்படி அவளது கண்கள், அவளின் குணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு அமைந்திருக்கிறதாம்.
குறள் :
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
சொல் விளக்கம் :
👉கண்டார் உயிருண்ணும்
கண்டார் - பார்ப்பவர்
உயிருண்ணும் - உயிர் + உண்ணும்
பார்ப்பவரின் உயிரை உண்ணுமாம்....
👉தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
தோற்றத்தால் - பார்ப்பதற்கு
பெண்தகை - பெண் தன்மையுடன்
பேதை - ஒன்றும் அறியாதவள், அசடு, அப்பாவி
அமர்த்தன - மாறுபடுதல், பொருந்தாத பொருத்தம்.
....அவளது கண்கள். ஆனால் பார்ப்பதற்கு அப்பெண் பேதை போல் இருப்பாளாம். என்ன ஒரு முரண் ?
Comments
Post a Comment