குறள் - 1085

காமத்துப்பால் > தகை அணங்கு உறுத்தல்

குறள் : 1085

பொருள் : 

அவள் பார்வை எவற்றையெல்லாம் கொண்டுள்ளதாம் ?

உயிரைக் கவர வந்த எமனின் பார்வை, அழகிய பெண்விழியின் பார்வை, மருண்டு நிற்கும் மானின் பார்வை என இம்மூன்றையுமே கொண்டுள்ளதாம்.

குறள் : 

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து

சொல் விளக்கம் : 

👉கூற்றமோ கண்ணோ பிணையோ

கூற்றமோ - எமனோ
கண்ணோ - விழியோ
பிணை - பெண் மான்

எமனோ ? பெண்விழியோ ? பெண்மானோ ?....

👉 மடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து

மடவரல் - பெண்
நோக்கம் - பார்வை
மூன்றும் - மூன்றையும்
உடைத்து - உடையது

....இப்பெண்ணின் பார்வை இம்மூன்றையுமே கொண்டுள்ளதே !!! 


Comments

Popular posts from this blog

புறநானூறு - 194

கம்பராமாயணம் - 02

உயிரெழுத்தும் ஓரெழுத்தும்