குறள் - 1086

காமத்துப்பால் > தகை அணங்கு உறுத்தல்

#குறள் 1086

விளக்கம் : 

அவளுடைய புருவம் எப்படி இருந்திருக்க வேண்டுமாம் ?

கொடிய புருவம் வளையாமல் ( நேராய் இருந்து  அவளது கண்களை ) மறைந்திருக்க வேண்டுமாம்.  அப்படி இருந்திருந்தால் நடுங்க வைக்கும் கொடுந்துயரை அவளது விழி
தந்திருக்காதாம்.

குறள் : 


கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்


சொல் விளக்கம் : 

👉 கொடும்புருவம் கோடா மறைப்பின்

கொடும்புருவம் - கொடிய புருவம்

கோடா - கோடு + அ
கோடு - வளைந்த
கோடா - வளையாமல்

மறைப்பின் - மறைத்தால்

இவளது கொடிய புருவம் வளையாமல் (நேராய் இருந்து) மறைக்குமானால்..... 


👉 நடுங்கஞர் செய்யல மன்இவள் கண்

நடுங்கஞர் - நடுங்கு + அஞர்
அஞர் - கொடுந்துயரம்
நடுங்க வைக்கும் கொடுந்துயரம்

அல - அல்ல
செய்யல - செய் + அல
செய்யல - செய்யமாட்டா.

மன் - ஒழியிசை
இவள் கண் - இவளது விழி

....நடுங்கச் செய்யும் கொடுந்துயரை இவளது விழி எனக்கு தந்திருக்காது‌.

Comments

Popular posts from this blog

புறநானூறு - 194

கம்பராமாயணம் - 02

உயிரெழுத்தும் ஓரெழுத்தும்