முப்பாலும் மூவரும்
முப்பால் சரி. திருக்குறளோட இன்னோரு புனைப்பெயர். அதென்ன மூவர் ? இப்பதிவில் கண்ணதாசன், கருபழனியப்பன், நான் என மூவர் சம்பந்தப்பட்டு இருப்பதால்....
நானும் திருக்குறள் படிக்க முயற்சி எடுத்து நிறைய முறை தோற்று இருக்கிறேன். அதற்கு இரு காரணங்கள் இருப்பதாக நான் உணர்கிறேன். ஒன்று, வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் புரியாமை. மற்றொன்று திருக்குறளை அறத்தில் இருந்து படிக்கத் தொடங்கியது.
திருக்குறள் படிப்பது பற்றி கண்ணதாசன் கூறியதாக கருபழனியப்பன் ஒரு உரையாடல் நிகழ்வில் கூறியிருந்தார்.
" திருக்குறளை அறம் படித்து பொருள் படித்து இன்பம் படிக்க வைக்காதீர்கள். எவனும் படிக்கமாட்டான். உலகத்தில் மனிதன் தேடுவது இன்பம். இன்பத்தை முதலில் படிக்க வேண்டும். இன்பம் வேண்டுமானால் என்ன வேண்டும் ? பொருள் வேண்டும். பொருள் இருந்தால் தான் இன்பம் வரும். அதனால் இன்பத்தை முதலில் படிக்கச் சொல். பொருள் சம்பாதிக்க அறம் வேண்டும். அப்போது அறம் படிக்கச் சொன்னால் அனைவரும் படித்து முடித்துவிடுவார்கள் "
அதே உரையாடலில் வள்ளுவன் குறித்து கருபழனியப்பன் கூறியிருந்த இன்னொரு கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
" உலகில் முதன்முதலில் 1330 ட்வீட் (tweet) எழுதியவன் திருவள்ளுவன் தான். ஒன்றே முக்கால் ( 1+ 3/4) அடியில்... "
முடிவு :
கண்ணதாசனின் அந்த சிந்தனை, சுக்குபாய் பிரியாணி போல் மிகவும் பிடித்துவிட்டதால்
இன்பத்துப்பாலில் இருந்து திருக்குறளை படிக்க ஆரம்பிப்பதாக முடிவு.
மேலும் ஒவ்வொரு குறளாக இதே வலைப்பக்கத்தில் பதிவு செய்யப்படும் என்பது கூடுதல் தகவல்.
" So, The court is adjourned.... "
நானும் திருக்குறள் படிக்க முயற்சி எடுத்து நிறைய முறை தோற்று இருக்கிறேன். அதற்கு இரு காரணங்கள் இருப்பதாக நான் உணர்கிறேன். ஒன்று, வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் புரியாமை. மற்றொன்று திருக்குறளை அறத்தில் இருந்து படிக்கத் தொடங்கியது.
திருக்குறள் படிப்பது பற்றி கண்ணதாசன் கூறியதாக கருபழனியப்பன் ஒரு உரையாடல் நிகழ்வில் கூறியிருந்தார்.
" திருக்குறளை அறம் படித்து பொருள் படித்து இன்பம் படிக்க வைக்காதீர்கள். எவனும் படிக்கமாட்டான். உலகத்தில் மனிதன் தேடுவது இன்பம். இன்பத்தை முதலில் படிக்க வேண்டும். இன்பம் வேண்டுமானால் என்ன வேண்டும் ? பொருள் வேண்டும். பொருள் இருந்தால் தான் இன்பம் வரும். அதனால் இன்பத்தை முதலில் படிக்கச் சொல். பொருள் சம்பாதிக்க அறம் வேண்டும். அப்போது அறம் படிக்கச் சொன்னால் அனைவரும் படித்து முடித்துவிடுவார்கள் "
அதே உரையாடலில் வள்ளுவன் குறித்து கருபழனியப்பன் கூறியிருந்த இன்னொரு கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
" உலகில் முதன்முதலில் 1330 ட்வீட் (tweet) எழுதியவன் திருவள்ளுவன் தான். ஒன்றே முக்கால் ( 1+ 3/4) அடியில்... "
முடிவு :
கண்ணதாசனின் அந்த சிந்தனை, சுக்குபாய் பிரியாணி போல் மிகவும் பிடித்துவிட்டதால்
இன்பத்துப்பாலில் இருந்து திருக்குறளை படிக்க ஆரம்பிப்பதாக முடிவு.
மேலும் ஒவ்வொரு குறளாக இதே வலைப்பக்கத்தில் பதிவு செய்யப்படும் என்பது கூடுதல் தகவல்.
" So, The court is adjourned.... "
Comments
Post a Comment