கம்பராமாயணம் - 01

⚠️ Disclaimer warning :

கம்பராமாயணம் படிக்கப்பட வேண்டும்
ராமனுக்காக அல்ல...
கம்பனுக்காக...

--------------------------
கம்பராமாயணம் > பால காண்டம் > கடவுள் வாழ்த்து

பொருள் : 

இங்குள்ள அனைத்து உலகையும் தன் சிந்தையால் படைப்பது, காப்பது, அழிப்பது என அனைத்தும் ஒரு முடிவில்லாத, அளவற்ற விளையாட்டாய் செய்யும் அவரே எங்கள் தலைவர். அப்படிப்பட்டவரிடமே நாங்கள் சரணடைகிறோம்.

பாடல் : 

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைப்பெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

சொல் விளக்கம் : 

👉 உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் :

யாவையும் - அனைத்தையும்,
தாம் - தன்
உளவாக்கலும் - உள(ம்) + ஆக்கல்
உளம் -சிந்தையால் படைத்தல்

👉 நிலைப்பெறுத்தலும். நீக்கலும்

நிலைப்பெறுத்தல் - நிலைநிறுத்தல், காத்தல்
நீக்கல் - நீக்குதல், அழித்தல்

👉 நீங்கலா, அலகு இலா விளையாட்டு உடையார்

நீங்கலா - நீங்கு + இலா ; முடிவு + இல்லாத.
அலகு இலா - அளவு + இல்லாத

👉 அவர் தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

அவர் தலைவர் - அவர்தான் தலைவர்
அன்னவர்க்கே - அப்படிப்பட்டவர்க்கே
சரண் நாங்கள் - நாங்கள் சரணடைகிறோம்.


Comments

Popular posts from this blog

புறநானூறு - 194

கம்பராமாயணம் - 02

உயிரெழுத்தும் ஓரெழுத்தும்