பரியேறும் பெருமாள்

பரியேறும் பெருமாள் :

" A movie is made for the audience and a film is made for both the audience and the filmmakers. ~ David fincher. "


பரியேறும் பெருமாள் மூவி கிடையாது. பிலிம்-ன்னு நினைக்கிறேன். இயக்குநருக்கும் இப்படம் மிகப்பெரிய மைல்கல்லாக அமையும். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இயக்குநர்களில் மாரி செல்வராஜ் முக்கியமானவராக கருதப்படுவர் என்பதில் துளியளவு கூட சந்தேகமில்லை.

இந்த படத்தோட நிறைகள் மட்டும் பார்த்தால் எக்குத்தப்பா எகிறிக் கிடக்கிறது. படத்தில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். படத்தின் மிகப்பெரிய பலமாக நான் பார்ப்பது வசனங்களையே. இரண்டாவது, இயக்குநர் தேர்ந்தெடுத்து இருக்கும் கதைக்களம். அதற்காகவே எழுந்து நின்று ஒருமுறை அவருக்கு கைத்தட்டலாம்.

வசனமும் மாரி செல்வராஜே தான் எழுதி இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். படத்திற்கு இசையமைத்த சந்தோஷி பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. வழக்கம் போல்  பிரித்திருக்கிறார்.  யோகி பாபு தன்னை குணச்சித்திர நடிகராக மறுமுறை ஒருமுறை நிலைநாட்டி இருக்கிறார்.

தாத்தாவாக நடித்திருக்கும் கராத்தே வெங்கடேஷிம் கவனம் ஈர்க்கிறார். ஆனந்தியின் தந்தையாக நடித்திருக்கும் மாரிமுத்துவின் நடிப்பில் அத்தனை இயல்பு‌. 

தமிழ் திரைப்படங்கள் உலகத்தரம் வாய்ந்தது என்பதை நிருபிக்கும் மற்றொரு படம் 'பரியேறும் பெருமாள்'.



" ஏ !!!! Miss பண்ணாதீய. அப்பறம் வருத்தப்படுவீய்ய.... "

Comments

Popular posts from this blog

புறநானூறு - 194

கம்பராமாயணம் - 02

உயிரெழுத்தும் ஓரெழுத்தும்