'Sacred games'-ன் தலைப்பிற்கான காரணங்கள் - பகுதி 3


எச்சரிக்கை : முன்பே கூறியது போல், Sacred games பார்த்தவர்களும், 'பார்க்க மாட்டேன்'-னு உறுதியா இருப்பவர்கள் மட்டும் படியுங்கள். இனிமே தான் பார்க்கப் போகிறீர்கள் எனில் இப்பொழுதை படிப்பதை நிறுத்திவிட்டு சென்றுவிடவும். ஏனெனில் கதையின் முக்கியமான முடிச்சுகளை இக்கட்டுரை சொல்லக்கூடும்.
------------------------------------------------------------
Scared games - ன் முதல் இரண்டு தலைப்புகளுக்கான காரணங்கள் இங்கே :


மூன்றாம் & நான்காம் தலைப்பிற்கான காரணங்கள் இங்கே :

------------------------------------------------------------------
ஐந்தாம் & ஆறாம் தலைப்பிற்கான காரணங்கள் :

5. சரமா ( Sarama ) :

இந்து புராணத்தின் படி, நரகர்களின் ஒரு பிரிவினரான பனியர்களால் கடத்தப்பட்ட பசுக்களை மீட்க இந்திரனுக்கு உதவிய பெண்நாய் தான் சரமா. அந்நாய் பசுக்களை கண்டறிய போராடியது. மேலும் அது தன் உள்ளுணர்வு சார்ந்த அறிவுக்கு பெயர்போனது.


Sacred games கதையின்படி, போலிஸ் அதிகாரியான சர்தாஜ் தனக்கு தகவல் கொடுத்து உதவிய நயனிகாவை காப்பாற்றப் போராடுகிறார். சி.பி.ஐ அதிகாரியான அஞ்சலி தகவல் கொடுத்து உதவும் ( Bunty ) பண்டியை காப்பாற்ற போராடுகிறார். பொதுவாக இருவரும் சரமாவைப் போல் உண்மைக்காக போராடியதாக தொடர்பு படுத்தப்படுகிறது.

6. ப்ரேதகல்பா ( Pretakalpa ) :

ப்ரேதகல்பா என்பது கருட புராணத்தின் ஒரு பகுதி. இது வாழ்வின் சுழற்சி, இறப்பு, கர்மா, ஈமச்சடங்கு  மற்றும் இன்ன பிறவற்றை குறித்தும் கூறுகிறது. ஒருவரின் ஈமச்சடங்கின் போது இப்பகுதி வாசிக்கப்படுகிறது.


Sacred games கதையின்படி, தன் நாயை கொன்றதற்காக ( episode 1 ) ஜோயா மிர்ஸா தன் காதலனை பழிவாங்குகிறார். ஒருவிதத்தில் கர்மா என எடுத்துக் கொள்ளலாமென தோன்றுகிறது.

சர்தாஜ் -ன் உதவி போலிஸ் அதிகாரியான கட்டேகர் (மனுசன் நடிப்பு-ல பிச்சு எறிஞ்சுடாப்ல... ) இந்த episode-ன் கடைசியில் கொலை செய்யப்படுகிறார். அவரின் இறப்பிற்கு வழங்கப்படும் அரசு மரியாதையை தான் இயக்குநர் ப்ரேதகல்பாவோடு தொடர்பு படுத்துகிறார் என நினைக்கிறேன்.

தலைப்புகள் தொடரும்...
----------------------------------------------------------------------
நிழற்பட உதவி 🙏 :

https://pin.it/kjle24ujxgqwx5
https://pin.it/igkuen3cgcv5it



Comments

Popular posts from this blog

புறநானூறு - 194

கம்பராமாயணம் - 02

உயிரெழுத்தும் ஓரெழுத்தும்