'Sacred games'-ன் தலைப்பிற்கான காரணங்கள் - பகுதி 1

Scared games -ல, என்னோட கவனத்தை ஈர்த்தது ஒவ்வொரு episode-க்கும் வைக்கப்பட்டுள்ள தலைப்புகள். Season 1 -ல மொத்தம் எட்டு episodes. எட்டு தலைப்புகள். தலைப்புகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம்-னு கூகுள்ள தேடும் போது கிடைத்ததை இங்கே பதிவிட்டிருக்கிறேன். ( தமிழில் இயக்குநர் பிரம்மன் தன்னுடைய முதல் படத்திற்கு திருக்குறளில் ஒரு அதிகாரத்தின் பெயரை இட்டார். 'குற்றம் கடிதல்' )


Sacred games பார்த்தவர்களும், 'பார்க்க மாட்டேன்'-னு உறுதியா இருப்பவர்கள் மட்டும் படியுங்கள். இனிமே தான் பார்க்க போகிறீர்கள் எனில் இப்பொழுதை நிறுத்திவிட்டு சென்றுவிடவும். ஏனெனில் கதையின் முக்கியமான முடிச்சுகளை இக்கட்டுரை சொல்லக்கூடும்.

முதல் இரண்டு தலைப்புகளுக்கான காரணத்தை மட்டும் இங்கே பதிவிடுகிறேன்.

1. அஸ்வத்தாமா ( Aswatthama ) :

அஸ்வத்தாமா என்பவர் மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு எதிராக போராடிய முக்கிய கதாபாத்திரம். (Note it ! கதாபாத்திரம் மட்டும் தான். அவங்களுக்கு Harry Potter-னா, நமக்கு மகாபாரதம். குறைகளை தவிர்த்துவிட்டு நிறைகளை மட்டும் பார்த்தோம்-னா மகாபாரதம் ஒரு நல்ல fantasy கதை. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதை முன்னமே சொல்லிவிடுகிறேன்...)

துரோணச்சாரியாரின் மகன் தான் இந்த அஸ்வத்தாமன் . அப்போதைய மரபுப்படி, போர் முடிந்த பின்பு பகைவர்களை தாக்குவது சரி அல்ல. பாண்டவர்களை அழிக்க, இரவோடு இரவாக அவர்களின் கூடாரத்திற்கு தீவைத்து விடுவார் அசுவத்தாமன். இறந்தது என்னவோ பாண்டவர்களின் குழந்தைகள் தான். பாண்டவர்கள் அல்ல. இதனால் சினமுற்ற கண்ணன், 3000 வருடங்கள் உயிருடன் வாழும்படி அஸ்வத்தாமனுக்கு சாபம் கொடுத்துவிடுவார்.  ( எப்படி எல்லாம் சாபம் குடுக்குறாங்க ? வாழ்றதெல்லாம் சாபமா ? )



Sacred games -ன் கதைப்படி , கணேஷ் காய்துண்டே தன்னை அஸ்வத்தாமனாக கருதிக்கொள்கிறார்.  முதல் episode-ல் அவர் இறந்து விடுகிறார். அவர் இறந்த போதும், அவரின் கதை தொடர்கிறது. தன்னுடைய அமரத்துவத்தை காய்துண்டே பின்வருமாறு கூறுகிறார்.

" நான்தான் சொன்னேன்-ல சர்தாஜ் ! நான் அஸ்வத்தாமன்-னு... இந்த ஆட்டம் முடியிற வரைக்கும் நான் எங்கயும் போகமாட்டேன் "

2. ஹாலாஹாலா ( Halahala ) :

ஹாலாஹாலா என்பது அமிர்தத்தை கடையும் போது உருவான விஷம்.

ஐராவதம் என்கிற யானையில் தேவர்களின் தலைவனான இந்திரன் உலா வரும்போது துர்வாகர் என்கிற முனிவரை சந்திக்கிறார். அந்த முனிவர் விஷேசமான மாலை ஒன்றை இந்திரனுக்கு பரிசாக அளிக்கிறார். இந்திரன் அம்மாலையை தன் யானையிடம் கொடுக்கிறார். யானையோ அம்மாலையை வாங்கி கீழே போட்டுவிட்டுகிறது. இதனால் சினமுற்ற முனிவர் தேவர்கள் தங்களது சக்தியும்  அதிர்ஷடத்தையும் முழுவதுமாக இழக்குமாறு சாபமிடுவார்.  இதனை அடுத்து, தேவர்களுக்கும் அசுரர்களும் இடையே நடந்த சண்டையில் தேவர்கள் முனிவர் இட்ட சாபத்தால் தோற்றுவிடுகின்றனர். இதனால் பிரபஞ்சம் முழுவதும் அசுரர்களின் தலைவனான மகாபாலியின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வந்துவிடுகிறது. என்ன செய்வதென்று புரியாமல் தேவர்கள் அனைவரும் விஷ்ணுவிடம் முறையிடுகின்றனர்.  பாற்கடலை இருபிரிவினரும் சேர்ந்து கடைந்து கிடைக்கும் அமிர்தத்தை சமமாக பங்கிட்டுக் கொள்ளலாம் என அசுரர்களிடம் சமரசம் பேசுமாறு தேவர்களுக்கு விஷ்ணு அறிவுரை கூறினார். கூடவே அந்த அமிர்தம் அசுரர்களுக்கு கிடைக்காமல் இருப்பதற்கான திட்டத்தையும் தேவர்களுக்கு சொல்லி அனுப்புகிறார். ( உழைத்தவனை ஏமாற்றுவது.... சரியா ? தவறா ? )

நம்ம வீட்டுல தயிர் கடைந்து மோர் தயாரிப்பது போல் பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்கிறார்கள். மந்தாரா மலை மத்தாக பயன்படுத்தப்படுகிறது. மத்தை முன்னும் பின்னும் இழுக்கும் கயிறாக வாசுகி பாம்பு பயன்படுத்தப்படுகிறது. பாம்பின் தலைப்பகுதியை அசுரர்களும், வால்பகுதியை தேவர்களும் பிடித்துக் கொள்கின்றனர். பாற்கடலை கடையும் போது, அமிர்தத்தோடு வேறுசில பொருட்களும் வெளிவருகின்றன. அதில் ஹாலாஹாலா விஷமும் ஒன்று. அதன் நெடி கூட மிகவும் விஷமுள்ள ஒன்று. எனவே மறுபடியும் என்ன செய்வதென்று தெரியாமல் விஷ்ணுவை தேவர்கள் நாடினர். விஷ்ணு சிவனிடம் முறையிடுமாறு கூறுகிறார். பிரபஞ்சத்தை காக்க சிவன் அவ்விஷத்தை பருகினார். பார்வதி சிவனின் கழுத்தைப் பற்றி அவ்விசத்தால் அவருக்குள் இருக்கும் பிரபஞ்சம் அழியாமல் இருக்கும்படி காத்தார். அவ்விசத்தின் விளைவாக சிவனின் கழுத்து நீலநிறமாக மாறியது. அதன் காரணமாகவே சிவன் பின்நாட்களில் 'நீலகண்டன்' எனவும் அழைக்கப்படுகிறார்.



Sacred games கதைப்படி , 25 நாட்களில் மும்பையை சூழப் போகும் ஆபத்து தான் ஹாலாஹாலா விஷம். போலிஸ் அதிகாரியான சர்தாஜ் தான் சிவன். சர்தாஜ் காய்துண்டேவின் குகையை கண்டுபிடிப்பதோடு அந்த ஆபத்தை தீர்ப்பதற்கான முழு பொறுப்பையும் சர்தாஜ் ஏற்றுக் கொள்கிறார் அந்த சிவனைப் போல....


தலைப்புகள் தொடரும்.....


Comments

Popular posts from this blog

புறநானூறு - 194

கம்பராமாயணம் - 02

உயிரெழுத்தும் ஓரெழுத்தும்