கம்பராமாயணம் - 02

விளக்கம் : 

சத்தமிடும் பால் போன்ற கடலை,  பூனையொன்று தன் நாவால் நக்கி முழுதும் பருகிடத் துணிவது போல் ஆசை கொண்டு சொல்லத் தொடங்கினேன் இக்குற்றமற்ற, வெற்றி உடைய ராமனின் கதையை...

பாடல் : 

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று. ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென.
ஆசை பற்றி அறையலுற்றேன் - மற்று. இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ!

சொல் விளக்கம் :


👉 ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று

ஓசை பெற்று - ஒலிகளைக் கொண்ட
உயர் பாற்கடல் உற்று - உயர்வான பால் போன்ற கடலை அடைந்து

👉 ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென

ஒரு பூசை - ஒரு பூனை
முற்றவும் - முழுவதையும்
நக்குபு - நக்குதல்
புக்கென - பு(க்)கு + என
புகு - நுழைவது, செல்வது

👉 ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று

அறையலுற்றேன் - அறையல் + உற்றேன்
சொல்லத் தொடங்கினேன்

மற்று - அசைநிலை.
இதற்கு அர்த்தம் ஏதும் அகிடையாது.
ஓசை நயத்திற்காக இங்கு சேர்க்கப்பட்டுள்ளது.

👉 இக்காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ!

இக்காசு - இந்த + ஆசு
ஆசு - குற்றம்
இல் - இல்லாத

கொற்றம் - வெற்றி

அரோ - அசைநிலை.
இதற்கும் அர்த்தம் ஏதும் கிடையாது.
ஓசை நயத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளது.

#கம்பர் 

Comments

Popular posts from this blog

புறநானூறு - 194

உயிரெழுத்தும் ஓரெழுத்தும்