'Sacred games'-ன் தலைப்பிற்கான காரணங்கள் - பகுதி 4
இறுதி எச்சரிக்கை : முன்பே கூறியது போல், Sacred games பார்த்தவர்களும், 'பார்க்க மாட்டேன்'-னு உறுதியா இருப்பவர்கள் மட்டும் படியுங்கள். இனிமே தான் பார்க்கப் போகிறீர்கள் எனில் இப்பொழுதை படிப்பதை நிறுத்திவிட்டு சென்றுவிடவும். ஏனெனில் கதையின் முக்கியமான முடிச்சுகளை இக்கட்டுரை சொல்லக்கூடும்.
------------------------------------------------------------
------------------------------------------------------------
Scared games - ன் முதல் இரண்டு தலைப்புகளுக்கான காரணங்கள் இங்கே :
மூன்றாம் & நான்காம் தலைப்பிற்கான காரணங்கள் இங்கே :
ஐந்தாம் & ஆறாம் தலைப்பிற்கான காரணங்கள் :
https://nagalpakkangal.blogspot.com/2018/09/sacred-games_21.html?m=1
---------------------------------------------------------
---------------------------------------------------------
ஏழாம் & எட்டாம் தலைப்பிற்கான காரணங்கள்
7.ருத்ரா ( Rudra ) :
Sacred games கதைப்படி, சுலைமான் இசாவின் ஆட்களால் காய்துண்டேவின் மனைவி சுபத்ரா கொலை செய்யப்படுகிறார். அந்நிகழ்வு காய்துண்டே-வை கோபத்தின் எல்லைக்கே கொண்டு செல்கிறது. அதற்கு காரணமானவர்களை கொலை செய்ய துடித்து அலைகிறார். காய்துண்டே, இங்கு ருத்ரனாக சித்தரிக்கப்படுகிறார்.
8. யயாதி ( Yayati ) :
இந்து புராணத்தின் படி, யயாதி என்பவர் பாண்டவர்களின் முன்னோர். அவர் தேவயானியை மணக்க நேரிடுகிறது. தேவயானி அசுரகுல குருவான சுக்ராச்சாரியாரின் மகள். அக்குரு தன் மகளோடு அவளின் பணிப்பெண்ணான சர்மிஸ்தா-வையும் உடன் அனுப்பி வைக்கிறார். ஒரே ஒரு நிபந்தனையுடன். அப்பணிப்பெண்ணுடன் எந்த உறவு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்பதே அந்த நிபந்தனை. சர்மிஸ்தாவிற்கோ யயாதியுடன் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம். எப்படியோ பேசி யயாதியையும் சம்மதிக்க வைக்கிறாள். இதை குறித்து அறிந்த தேவயானி, தன் தந்தையிடம் இதை கூறுகிறாள். கோபமடைந்த அக்குரு யாயதி முதுமை அடையும்படி சாபமொன்றை இடுகிறார். தன் பக்க நியாயத்தை யாயதி எடுத்துரைத்த பின், மனமிறங்கிய அக்குரு மீண்டும் இளமையை பெறுவதற்கான வழியொன்றை சொல்கிறார். யயாதி தன் மகன் ஒருவனிடம் இருந்து இளமை பெற்றுக் கொள்ளலாம். அவரின் ஐந்து மகன்களில் ஒருவனான புரு இதற்கு சம்மதிக்கிறான்.
தன் தந்தை இளமை பெற அவன் முதுமை ஏற்றுக்கொண்டான். இன்னும் சரியாகச் சொன்னால் பயன்படுத்தப்பட்டான்.
தன் தந்தை இளமை பெற அவன் முதுமை ஏற்றுக்கொண்டான். இன்னும் சரியாகச் சொன்னால் பயன்படுத்தப்பட்டான்.
Sacred games கதையின் படி, காய்துண்டேவின் மூன்றாம் தந்தையான குருஜியின் திட்டத்திற்காக காய்துண்டே பயன்படுத்தப்படுகிறார். குருஜி யயாதியாக சித்தரிக்கப்படுகிறார்.
தலைப்புகள் முற்றும்.
Comments
Post a Comment